இனப்பிரச்சினைத் தீர்வு என்ற பெயரில் ரணில் கூட்டமைப்பு சந்திப்பு!
ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்திப்பில் பங்குபற்றவுள்ளனர். வடக்கு மாகாண உறுப்பினர்களைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்த ரணில் விக்கிரமசிங்க சென்ற மாதம் சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டியிருந்தார். இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனியாகச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இச் சந்திப்பையடுத்து இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்த மாதம் பத்தாம் பதினொராம் மற்றும் பதின்மூன்றாம் திகதிகளில் தொடர் பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இந்தப் பேச்சில் பங்குபற்றும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சந்திப்பில் கல்ந்துகொள்ளுமா இல்லையா என்று விக்னேஸ்வன் இதுவரை எதுவுமே கூறவில்லை. அழைப்பு அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது என்ற
Comments
Post a Comment