Posts

Showing posts from January, 2023

விக்கி – மணி உடன் இணைந்து ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் போட்டி !

Image
 ஈ.பி.டி.பி A அணியும் ஈ.பி.டி.பி B அணியும் இணைந்து வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த 2018 உள்ளுராட்சி தேர்தலில் ஈ.பி.டி.பி சார்பாக பாசையூர் வட்டாரத்தில் போட்டியிட்டு யாழ்.மாநகர சபை ஈ.பி.டி.பி உறுப்பினராக இருக்கும் டேமியனும், குருநகர் வட்டாரத்தில் போட்டியிட்டு ஈ.பி.டி.பி மாநகர சபை உறுப்பினராக இருக்கும் யுகாவும் இந்தமுறை விக்கி – மற்றும் மணி உடன் இணைந்து போட்டியிடுகின்றனர்.

சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர்களாக சுமந்திரன் அணி! மாமனிதர் ரவிராஜ் ஆதரவாளர்கள் முற்றாக நீக்கம்

Image
 சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர்களாகசுமந்திரன் அணி! மாமனிதர் ரவிராஜ் ஆதரவாளர்கள் முற்றாக நீக்கம்

இந்தியாவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எழுத்து மூலமாக கோரிக்கை

Image
 தமிழர் தேசத்தை அங்கீகரித்து அதனைப் பாதுகாக்கும் வகையில் இலங்கையில் சமஷ்டி அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு இந்தியா முழுமையான ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்றையதினம் தமிழ்த் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின்போது பங்கேற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த எழுத்துமூலமான கோரிக்கையை அவரிடத்தில் கையளித்துள்ளார். குறித்த கோரிக்கை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் வருமாறு, பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு கட்டத்தில் உள்ளது. கடந்த 75 வருடங்களாக பின்பற்றப்பட்ட கொள்கைகளும் தீர்க்கப்படாத இனப்பிரச்சினையும் இலங்கையை தற்போதைய நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது. இலங்கையில் சமீபகால ஏற்பட்ட மக்களின் எழுச்சிகள் ஒரு முழுமையான ‘முறைமை மாற்றத்திற்கு’ தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளமையானது கடந்த காலநிலைமைகள் தொடர்ந்தும் நீடிப்பதற்கு விரும்பவில்லை என்பதை

பித்தளை விளக்குடன் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி !

Image
வடகிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் கட்சிகளின் கூட்டிற்கான சின்னமாக புளொட் அமைப்பின் தேர்தல் சின்னமான பித்தளை விளக்கை தூசிதட்டி அறிவித்துள்ளர். 

ஜனநாயக போராளிகள் கட்சி உள்ளே! விக்கி - மணி வெளியே!

Image
 என்னை பொம்மை போல பாவித்து தாங்கள் நினைத்ததை செய்வதற்கு முயற்சித்தார்கள் போல தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது அதனால் தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து வெளியேறினேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,  ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுடன் அங்கு வந்திருந்து அதனை மேற்கொள்ள திட்டமிட்டனர்.சில விடயங்களில் இணக்கம் ஏற்பட்ட போதும் பல விடயங்கள் முரண்பாட்டை தோற்றுவித்தது. ஐந்து கட்சிகளின் கூட்டணியாக நாம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த போது இன்றைய கூட்டத்தில் எமக்குத் தெரியாமல் திடீரென புதிதாக ஜனநாயக போராளிகள் கட்சியை அழைத்து வந்திருந்தனர். ஐனநாயகப் போராளிகள் கட்சி பல்வேறு குழுக்களுடன் தொடர்புடையதாக நான் அறிந்தேன். புலிகளோடு இருக்கும் போது அவர்கள் எப்படி இருந்தார்கள் என்றும் தற்போது அவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதனையும் நாம் அறிய வேண்டும். அவர்களை ஆறாவது கட்சியாக கூட்டணிக்குள் இணைக்கும் முடிவை ரெலோ, புளொட

இனப்பிரச்சினைத் தீர்வு என்ற பெயரில் ரணிலுடன் சம்பந்தன், செல்வம், சுமந்திரன், சித்தார்த்தன் சந்திப்பு

Image
 வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரங்களைச் செயற்படுத்துவற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்களை ஆராய்ந்து எதிர்வரும் பத்தாம் திகதி பதிலளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்புத் தொடர்பாக சுமந்திரன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.    வடக்குக் கிழக்கு நிலைமைகள் தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எடுத்துக் கூறியதாகவும், சுமந்திரன் தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவுடன் மூன்றாவது தடவையாக இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இன்றைய சந்திப்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துகொண்டனர். கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்ச்சியாகப் பேச்சுக்கள்

இனப்பிரச்சினைத் தீர்வு என்ற பெயரில் ரணில் கூட்டமைப்பு சந்திப்பு!

Image
 ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்திப்பில் பங்குபற்றவுள்ளனர். வடக்கு மாகாண உறுப்பினர்களைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்த ரணில் விக்கிரமசிங்க சென்ற மாதம் சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டியிருந்தார். இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனியாகச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.    இச் சந்திப்பையடுத்து இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்த மாதம் பத்தாம் பதினொராம் மற்றும் பதின்மூன்றாம் திகதிகளில் தொடர் பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இந்தப் பேச்சில் பங்குபற்றும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சந்திப்பில் கல்ந்துகொள்ளுமா இல்லையா என்று விக்னேஸ்வன் இதுவரை எதுவுமே கூறவில்லை. அழைப்பு அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது என்ற

ரணில் இரகசிய திட்டம் இந்தியாவைக் கடந்து அமெரிக்க சீன அரசுகளுடன் நேரடியாக உறவைப் பேணும் உத்தி

Image
  பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செய்து இந்தியத் தலையீட்டை இல்லாமல் செய்வதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கம். தற்போது புதுடில்லியில் இலங்கைக்கான தூதுவராக அமைச்சரவை அந்தஸ்த்துடன் பதவி வகிக்கும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட 13 ஐ இலங்கை அரசியல் யாப்பில் இருந்து அகற்றுவற்கான திட்டங்களை வகுத்து வருகிறார் என்பதைச் சமீபகால அணுகுமுறைகள் காண்பிக்கின்றன. மிலிந்த மொறகொட 2002 சமாதானப் பேச்சுக் காலத்தில் எவ்வாறு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையைத் தரமிறக்கும் சர்வதேச நகர்வுகளில் ரணிலுக்கு விசுவாசமாக செயற்பட்டாரோ, அதனையும் விட கோட்டாபய ராஜபக்ச மிலிந்த மொறகொட மீது அதீத நம்பிக்கை வைத்துச் செயற்பட்டிருந்தார்.   அதாவது 2009 இல் போரை ஆயுதரீதியாக வெற்றிகொண்டது போன்று, அரசியல் ரீதியாக அதுவும் சர்வதேச அரங்கில் இருந்து ஈழத்தமிழர் விவகாரத்தை முற்றாக நீக்கம் செய்ய மிலிந்த மொறொகொட, சுவிஸ்லாந்தில் தூதுவராகப் பதவி வகிக்கும் சி.ஏ.பிரேமச்சந்திர ஆகியோரை கோட்டாபய நம்பியது போன்று தற்போது ரணிலும் நம்புகிறார். ஏறத்தாள கோட்டாபய வகுத்த வியூகமே இது. மைக் பொம்பியோ அமெரிக்க வெளியுறவு